17 December 2011

குரு தட்சணை

அப்போது எனக்கு 13 வயது. அன்று நாட்டிய வகுப்பு. அந்த வயதில் படிப்பும் நடன வகுப்பும் மட்டுமே எனது உலகமாக இருந்தது. சிந்தனை செயல் அனைத்தும் பரதத்தையொட்டியே இருந்த காலம் அது. வழக்கம் போல அன்று நடன வகுப்பு இறை மற்றும் குரு வணக்கத்துடன் ஆரம்பித்தது. சுமார் 30 மாணவர்களுக்கு மேல் அடங்கிய வகுப்பில் அன்றைக்கு என் குருவின் கவனம் என் மேல் இருந்தது. சட்டென்று, எல்லா மாணவர்களையும் கடந்த வாரம் கற்ற நடனத்தை மீள்பார்வை செய்யும் படி கோயில் மண்டபத்தின் வலது புறம் போகச்சொன்னார். குருவின் முன் நான் மட்டும் நின்றேன். என் நாட்டிய குருவின் மீது எனக்கு நிறைய குருபக்தி உண்டு. அவர் மிகவும் கண்டிப்பான குரு. கண்டிப்பால் மட்டுமே ஓர் ஒழுக்கமான மற்றும் சிறப்பான நர்த்தகியை உருவாக்க முடியும் என்பது அவருடைய கருத்து. ஆகவே, எல்லா மாணவர்களிடமும் கண்டிப்பாகத்தான் இருப்பார். என்னிடமும் அப்படித்தான். அவரிடம் நான் பேசிய வார்த்தைகளைக் கணக்கிட முடியும். கேட்டக் கேள்விக்கு மட்டுமே பதில் கூறுவேன். இன்றுவரைக்கும் அப்படித்தான். அவர் முன் ஒருத்தியாக நிற்பதற்கு பயமாகவும் மனதில் நிறைய கேள்விகளும் எழும்பின.

குரு, “நீ இன்னும் சின்னப்பிள்ளை இல்லை, சின்னப்பிள்ளைகள் மாதிரி ஆடமெ, கொஞ்சம் நாட்டியத்தை உணர்ந்து ஆடு. நான் உனக்கு ஒரு பதம் சொல்லித்தரேன்”. என்றார். மனதில் “அய்யோ…பதமா?” எனப் பதறினேன். உடனே, எனது கண்கள் அம்மாவைத் தேடியன. ஒவ்வொரு நடனவகுப்பிற்கும் என் அம்மா என்னுடன் வருவார். என் நாட்டிய வளர்ச்சியில் என் அம்மாவின் பங்கு நிறைய உள்ளது. நான் சிறந்த பரதநாட்டிய தாரகையாக வர வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். குரு கூறியதைக் கேட்டதும், என் கண்கள் அம்மாவை நோக்கி அகலமாக விரிந்தன.

பரதநாட்டியத்தில் நாட்டிய உருப்படிகள் (நாட்டிய வகைகள்) பத்து முக்கிய பிரிவுகளில் பதமும் ஒன்று. கடவுள் மீதான பாடல்களே பதங்கள் எனப்படும். இலக்கியம், இதிகாசம், புராண நிகழ்ச்சிகள், சமூகப் பாடல்கள் எல்லாம் பதங்களாகக் கருதப்படும். பதங்கள் நடனமணிகள் செய்கின்ற அழகிய முகபாவங்களை அதாவது நவரசங்களைப் பொறுத்தே சிறப்பு பெறுகிறது. “அலைபாயுதே கண்ணா”, பாரதியாரின் “சின்னஞ்சிறு கிளியே”, “ஆசை முகம் மறந்து போச்சே”, என புகழ்பெற்ற பதம் பாடல்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஒரு நர்த்தகி பதம் ஆடப்படும் பொழுது, அந்தப் பதம் குறிக்கும் நாயகன் அல்லது நாயகி அல்லது சகியின் கதாபாத்திரத்தை, வயது, சமூகத்தில் நிலை போன்ற பல கருத்துக்களைத் தெளிவாகப் புரிந்து கொண்டு முறையாக அபிநயிக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால், ஒவ்வொரு பதத்திற்குப் பின்னால் ஒரு சிறிய நாடகமே அடங்கியிக்கும். பதத்தை ஆடும் போது, ஒரு நர்த்தகி அப்பாடலின் உட்கருத்தையும் ஊகிக்கக்கூடிய கருத்துக்களையும், விரிவாக அபிநயிக்க வேண்டும். உதாரணத்திற்கு “அலைபாயுதே கண்ணா” எனும் பாடலுக்கு ஆடுகையில் ஒரு நர்த்தகி இராதை அல்லது கண்ணனை நேசிக்கும் பெண்ணாக மாற வேண்டியிருக்கிறது. பாரதியாரின் “சின்னஞ்சிறு கிளியே-கண்ணம்மா” எனும் பாடலுக்கு ஆடும்போது, பராசக்தியை குழந்தையாக எண்ணி ஆட வேண்டியிருக்கிறது. பாடலில் வரும் பின்னனிக்கதை அல்லது கதாமாந்தர்களின் தன்மையை உள்வாங்கிக்கொண்டு அதில் லாயித்து முகபாவத்துடன் ஆடினால் மட்டுமே பதம் பார்வையாரகளிடம் சென்றடையும்.

ஒரு நர்த்தகி நாட்டியத்தின் மீது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டால் அவளால் ஒரு தரமான பதத்தைச் சமர்ப்பிக்க முடியும். ஆகையால்தான், சிறந்த நடிப்பாற்றலை வெளிப்படுத்துவதற்கு, 50ஆம் – 60ஆம் ஆண்டுகளில் வெளிவந்த திரைப்பட நடிகர் நடிகைகள் அனைவருக்கும் நடனம் மற்றும் நாடகக் கலை மிகவும் அவசியமாக இருந்தது. பரதம் தெரிந்தவர்கள் மட்டுமே கருப்பு வெள்ளைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க முடியும் எனக் கட்டாயமும் இருந்தது. பதம் பல நடன உருப்படிகளில் சிறப்பிடம் பெற்ற ஒன்றாகும்.

இத்தகைய சிறப்பு அம்சங்கள் அடங்கிய பதம் பாடலுக்கு 13 வயதில் அபிநயம் பிடிப்பதற்குச் சிரமமாக இருந்தது. “அலைபாயுதே கண்ணா….” எனும் பாடலுக்கு விளக்கம் கொடுத்தப்பிறகு, அப்பாடலுக்கேற்ப அபிநயம் பிடிக்க கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார் குரு. என்னுடைய முதல் பதம் பாடல் அது. கண்ணனை நேசிக்கும் பெண்ணாக இப்பாடலுக்கு அபிநயம் பிடிக்க வேண்டும். குரு வாய்மொழியாகக் கூறியதும் நடன அசைவுகளை புரிந்துக் கொண்டு உடனே ஆடத்தொடங்கிவிடுவேன். ஆனால், அன்று குரு பலமுறை ஆடிகாட்டியும் என்னால் பின்பற்ற முடியவில்லை. கண்ணன் என் அருகில் நிற்பதாகவும், அவரைப் பார்த்து வெட்கம் படும்படியும் கூறினார் குரு. பலமுறை பொறுமையுடன் செய்து காட்டியவரின் பொறுமையைச் சோதித்தேன். கோபத்துடன், “ஏம்மா……..செய்ய மாட்டிங்கிறே!” என்றார். “பாவம் செய்ய கூச்சமாக இருக்கிறது மாஸ்டர். எல்லோரும் என்னையே பார்க்கிறார்கள்” என பயந்தவாறு கூறினேன். சிறிது நேரம் கோபத்துடன் என்னைப் பார்த்து, “நாட்டியம் ஆட கூச்சமா? உன் கூச்சம், உன் வெட்கம் அனைத்தையும் போக்கிவிட்டு நடனவகுப்புக்கு வா. இப்ப போ!” என்றார். பயம் உடல் முழுதும் பரவியது. மற்ற மாணவர்களுக்கு வழக்கம் போல் நாட்டிய வகுப்பு தொடர்ந்தது. தலைக்குனிந்து குற்றவாளிப் போல் செய்வதறியாது நின்றேன். என் வாழ்க்கையில் தன் ஆளுமையால் அதிகம் ஈர்த்தவர் என் நாட்டிய குருதான். நாட்டியம் மட்டுமல்லாமல் ஒரு பெண்ணாக எப்படி இருப்பது என்பதனை அவரிடம்தான் அதிகம் கற்றுக் கொண்டேன். அவரின் கோபம் என்னைப் பெரிதும் பாதித்தது. சிறிது நேரத்தில் மற்ற மாணவர்களுக்கு நடன வகுப்பு இனிதே முடிந்தது. என் முகவாட்டத்தைக் கண்ட குரு அவர் அருகே அழைத்தார்.

கோபத்தில் என்னை திட்டுவார் என நினைத்தேன். ஆனால், அன்று குரு என்னிடம் ஒரு கேள்விக் கேட்டார். குரு, “உன் அம்மா இறந்தால், நீ என்ன செய்வாய்” எனக் கேட்டார். அந்த வயதில் அம்மாவின் இறப்பை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. மீண்டும் என் கண்கள் என் அம்மாவைத் தேடியது. அப்போது, அம்மா என் பின்னால் நின்றுக்கொண்டிருந்தார். குரு அதே கேள்வியை மீண்டும் கேட்டார். தலைக்குனிந்தவாறு, நான் அழுவேன் என்றேன். குரு, “அப்போது உன்னுடன் நிறைய பேர் இருந்தாலும் அழுவாயா?” எனக் கேட்டார். “ஆமாம்” என்றேன். “அப்போ, நீ எல்லாரும் முன் அழுக கூச்சப்படமாட்டாயா?” எனக் கேட்டார். “இறந்தது என்னைப் பெற்றவளாக இருந்தால் எப்படி அழாமல் இருப்பது, நிறைய பேர் என் முன் இருந்தாலும் அதையெல்லாம் பொருப்படுத்தாமல் இயற்கையாகவே அழுகை வரும்” என்றேன். குரு சிரித்துக்கொண்டே, “உன் மனதில் அம்மா என்பவர் ஆழமாகப் பதிந்திருக்கிறார். திடீரென்று அவர் இல்லையென்றதும் நீ எங்கு இருக்கிறாய், யாரெல்லாம் உன்னுடன் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் மறந்து உன்னையறியாமலேயே கவலையாகி அழ ஆரம்பிப்பாய். இது நீ மட்டுமில்லை உலகில் அனைவரும் அப்படிதான். அதேபோல், நாட்டியம் உன் ஆழ்ந்த மனதில் பதிந்திருந்தால் எங்கு, எப்படி, யார் முன் இவையல்லாம் பொருப்படுத்தாமல் பாடலைக் கேட்டதும் ஆடத் துவங்குவாய். நாட்டியம் ஆடுகையில் உன் கவனம் முழுக்க நாட்டியத்தில்தானே இருக்க வேண்டும். யார் நான் ஆடுவதைப் பார்க்கிறார்கள்? நான் ஆடுவதற்கு கைத்தட்டுகிறார்களா? எனும் சிந்தனை சிதைவு உனக்கெதற்கு? சிந்தனைச் சிதைவு ஏற்பட்டால் மட்டுமே ஒரு நடனமணிக்கு கூச்சம், வெட்கம், பயம் போன்றவை எல்லாம் வரும். ஆடுவதற்கு கூச்சம், வெட்கம், பயம் போன்ற உணர்வுகளுக்கு இடம் கொடுத்தால் உன் ஆழ்ந்த மனதில் நாட்டியம் இல்லையெனப் பொருள்படும். நாட்டியம் உன்னுள் இருக்கிறதா இல்லையா என நீதான் முடிவு செய்ய வேண்டும். நாட்டியம் ஆடுவதை வெட்கமாக நினைப்பதற்கு அது கேவலமான விஷயமில்லை. உலகத்தில் கெட்டது செய்பவனும் தர்மத்தை அழிப்பவனும்தான் வெட்கம் பட வேண்டும். இறைவனின் புகழைப் பாட ஆட எதற்கு வெட்கம்” என்றார் குரு. அன்று கூறியது இன்னமுன் என் மனதில் பதிந்திருக்கிறது. தலையைக் குனிந்தவாறே இருந்தேன்.

“சிறப்பாக நாட்டியம் ஆடும் திறமை உனக்குண்டு. அதை வெட்கம் எனும் பெயரில் கெடுத்துக்கொள்ளதே. ஒவ்வொருவருக்கும் இந்தப் புவுயில் பிறப்பதற்கு காரணங்கள் உண்டு. உன் வேலை நாட்டியத்தை வளர்ப்பதானால், அதை செவ்வன செய்து முடி என்றார். முதலில் நீ ஒரு நர்த்தகி என்பதனை உணர வேண்டும். அடுத்ததாக உன் நாட்டியம் ஆடும் நோக்கத்தை அடைய ஒரே சிந்தனையுடன் இருக்க வேண்டும். இவையனத்தும் இருந்தால் மட்டுமே உன்னால் நாட்டியத்தை தொடர்ந்து படிக்க முடியும் என்றார்”. மெளனத்திற்குப் பிறகு, குருவின் முகத்தைப் பார்த்து மன்னிப்புக் கேட்டேன். சிரித்த முகத்துடன் தலையை மட்டும் ஆட்டினார். சிறுவயதிலிருந்தே என் மீது குருவிற்கு நிறைய நம்பிக்கை உண்டு. என் குருவின் நம்பிக்கையையும் என் அம்மாவின் கனவையும் நிறைவேற்றும் பெரிய கடமை எனக்கு இருந்த்து. இந்தக் கடமையிலிருந்து நான் இன்னும் தவரவில்லை என அவ்வப்போது நினைத்து என் மனம் மகிழ்ச்சிப் பட்டுக்கொள்ளும்.

நடன வகுப்பு முடிந்து வீட்டிற்குத் திரும்பிகையில் வழிநெடுகிலும் அம்மா, நீ நாட்டியத்தில் நிறைய சாதிக்க வேண்டும். உன் கூச்சத்தையெல்லாம் மூட்டைக்கட்டி போடு என்பதை கொஞ்சம் கண்டிப்பாகக் கூறினார். முகபாவனையை வளர்த்துக்கொள்ள ஏதேனும் செய்யவேண்டும் என மனதில் புழம்ப ஆரம்பித்தேன்.

என் அம்மாவிற்கு நடனத்துறையின் மீது நிறைய ஈடுபாடு உண்டு. என் முகபாவனையை மேம்படுத்த பல கருப்பு வெள்ளைத்திரப்படங்களை வாங்கி வந்தார். சிவாஜி கணேசம், பத்மினி மற்றும் வைஜேயந்திமாலா போன்றவர்களின் திரைப்படங்களைப் பார்க்குமாறு கூறினார். ஞாயிறு தோரும், நாட்டிய சம்பந்தப்பட்ட திரைப்படங்களைப் பார்ப்பதுதான் எங்கள் இருவரின் வேளை. தில்லானா மோகனம்பால், வஞ்ஜிக்கொட்டை வாலிபன், சலங்கை ஒலி, திருவிளையாடல், பக்திப்படங்களைப் பார்த்தது இன்னும் நினைவில் இருக்கிறது. தலைப்பகுதில் உள்ள அனைத்து உருப்புகளும் வார்த்தை மற்றும் மொழி இல்லாமல் மிகத் தெளிவாகப் பேசவேண்டும். மொழியும் வார்த்தைகளும் இல்லாமல் மிகத் தெளிவாகப் பேசுவதுதான் முகபாவனை. அதில் நடிகர் சிவாஜி கணேசனை மிஞ்சியவர் யாரும் இல்லை. நாட்டியத்திற்கென பிறந்தவர்கள் வரிசையில் லலிதா, ராகினி, பத்மினி, மற்றும் வைஜெயந்திமாலாவின் நடனங்கள் ஆற்புதமாக இருக்கும். வீடியோவை நிறுத்தி, நாட்டிய அசைவுகளையும் முகபாவங்களையும் உண்ணிப்பாகப் பலமுறை கவனித்து, கண்ணாடி முன் பலமுறை செய்துப் பார்ப்பேன். இவ்வாறு செய்கையில் அம்மா மிகவும் பொறுமையாக என்னுடன் உட்கார்ந்திருப்பார். இப்படியே என்னுடைய ஓய்வு நேரங்கள் கழியும். ஒருநாள், சங்கீதம் படித்தால் முகபாவம் வளரும் என குரு அம்மாவிடம் சொன்னார். உடனே, அம்மா என்னை கர்நாடக சங்கீத வகுப்புக்கும் அனுப்பினார். பழைய திரைப்படங்களும் சங்கீத வகுப்புகளும் என் முகபாவனையை மேம்படுத்தியது. இதனைத் தவிர்த்து, முகபாவங்களைப் பற்றி நிறைய வாசிக்க ஆரம்பித்தேன். யாருடன் பேசினாலும் அவர்களின் முகபாவனைகளை உற்று நோக்கியப்படியே பேசுவேன். குறிப்பாக நாட்டியம் பயில்பவர்களிடம்.

நாட்டியம் பயில்பவர்களிடம் சகஜமான பேசினாலே, அவர்கள் முகபாவனைகளுடன்தான் பேசுவார்கள். இதனை பெரும்பாலான நடனமணிகளிடம் கண்டுள்ளேன். அவ்வகையில் ஒருநாள் இந்தியாவிலிருந்து வந்த ஒரு நடன குருவிடம் பேசுகையில் என் முகபாவனை வளர்த்துக் கொள்வதற்கு ஒரு ஸ்லோகம் மற்றும் அதன் பொருளையும் சொன்னார்.

கை வழி கண்ணும்
கண் வழி கருத்தும்
கருத்து வழி ரசமும்
கால் வழி தாளமும்
சொல் வழி ராகமும்
சென்று சுவை பிறக்கும்.

இஃது ஓரு சமஸ்கிருத நாட்டிய சுலோகமாகும். நாட்டியம் ஆடுகையில் ஒரு நடமணியின் அசைவுகள் எப்படி அமைந்திருக்க வேண்டும் என இந்த சுலோகம் கூறுகிறது. ஒரு நர்த்தகி ஆடுகையில் அவளுடைய கை வழி அவளின் கண்கள் செல்ல வேண்டும். கை வழி சென்ற கண்கள் கருத்துடன் செல்ல வேண்டும். கருத்தின் வழி ரசம் பிறக்கும். ரசம் என்றால் மனதளவில் அனுபவிக்கும் அனுபவ நிலை. நர்த்தகியின் கால்களில் சலங்கைக் கட்டுவதால் அவளுடைய தாளம் பாடலுக்கேற்ப தவறாமல் இருக்க வேண்டும். ஒரு பாடலின் சொல் வழி ராகங்கள் அமைந்தால் பாடல் சிறப்பாக இருக்கும். இவையனைத்து இருந்தால் மட்டுமே, ஒரு நர்த்தகியின் மூலம் சிறப்பான நாட்டியம் பிறக்கும்.

எந்தவித கலை படைப்பாக இருந்தாலும், அதன் குறிக்கோள்/நோக்கம் ரச (மனதளவில் அனுபவிக்கும் அனுபவ நிலை) உற்பத்தி செய்வதே ஆகும். ஒரு சிறந்த ரசனை மட்டுமே ஒரு கலைஞனை தெம்பூட்டும். ஒரு கலைப்பொருளைப் படைப்பவருக்கும், கலையை ரசிப்பவருக்கும் ரசமே குறிக்கோளாக விளங்குகிறது. பண்டையகாலத்தில் பல வல்லுனர்கள் ரசனையைப் பற்றி பல நூல்கள் எழுதியுள்ளனர். அவர்களுள் பரதமுனியும் ஆவார். பரதமுனிதான் பரத சஸ்திரத்தை இயற்றியவர். அவர் இயற்றிய நாட்டிய சாஸ்திர நூலின் கருப்பொருளே நாட்டியத்தின் மூலம் ரசம் எவ்வாறு மிளிர்கிறது என்பது ஆகும்.

ரசம் உண்டாவதற்கு ஆதாரம் பாவம். பாவம் என்பது மனதில் எழும் உணர்ச்சி. இந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் கலை அபிநயம் என்பர். அபிநயம் என்பது ஸமஸ்கிருதச் சொல். அபி என்றால் நோக்கிடம். நய என்றால் எடுத்துச் செல்வது. ஒருவரை/ஒன்றை நோக்கி ஒருவரிடத்தே எடுத்துச் செல்லும்போது பாவத்தைத் தூண்டுவது அபிநயம் ஆகும். அபிநயத்தின் மூலம் வெளிப்படுத்தப்படும் உணர்ச்சிகள், கருத்துகள், ரசிகர் மனத்தைத் தொட்டு, அவர்கள் உள்ளங்களிலும் அதே உணர்ச்சிகள் உணர்வுகளாக எழும் பொழுது, அந்த ரசிகர்கள் அதே உணர்ச்சிகளைச் சுவைக்கின்றனர். அப்போது ரசிகர் மனதில் உண்டாகும் சுவைதான் ரசம்.

ரசத்தைப்பற்றி பேசுகையில், சட்டென என் அரங்கேற்ற நிகழ்வுதான் நினைவிற்கு வருகிறது. பரதநாட்டிய அரங்கேற்றத்தில் பதம் பாடல் ஒரு முக்கிய அம்சமாகும். அனைவரும் எதிர்ப்பார்க்கும் பாடலும் கூட. எனது பரதநாட்டிய அரங்கேற்றத்தின் போது, குருவின் உழைப்பால் மகாபாரதத்தில் வரும் பஞ்சாலி சபதத்தையொட்டி ஆடினேன். பஞ்சபாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று போனதிலிருந்து துரியோதனன் பஞ்சாலியின் புடவையை உறியும் வரை நான் அபிநயம் பிடித்தேன். சுமார் 25 நிமிட பாடலில் நான் ஒருத்தியே பஞ்சாலியாகவும் பஞ்சபாண்டவர்களாகவும் துரியோதனாகவும் ஆடவேண்டியிருந்தது. இம்மாதிரியான பாடலை ஆடுவதற்கு நிறைய கற்பனைத்திறன் இருக்க வேண்டும். கடவுள் கிருபையால் எனக்குக் கிடைத்த திறமையான குரு மூலம் என்னால் அப்பாடலுக்கு ஆடமுடிந்தது. அசுர ஆணாகவும் பெண்மை நிறைந்த பஞ்சாலியாகவும் முகபாவனை மற்றும் உடலசைவுகளை மாற்ற வேண்டியிருந்தது. பிறப்பால் பெண்ணாக இருந்தாலும் அசுர ஆணைப்போல் அப்பாடலின் அபிநயம் பிடித்தேன். அந்தப் பாடலுக்குச் சிறப்பாக ஆடினேன் என பலரும் பாராட்டினர். 5 வருடங்கள் ஆகியும், இன்னமும் எனது அரங்கேற்றத்திற்கு வந்தவர்கள் இப்பாடலைப் பற்றி பேசுவதுண்டு. நான் துரியோதனாக இருந்து பஞ்சாலியின் புடவையை உறியும் போது, பார்வையாளர்கள் முக்கியமான பெண்கள் தங்கள் கைகளால் அவர்கள் புடவை முந்தானியைப் பிடித்துக் கொண்டார்கள் என பலரும் கூறினர். அச்சபையில் பஞ்சாலி பட்ட அவமானம், கஷ்டங்களை அப்பாடலின் மூலம் கண்ட பலரும் கண் கலங்கினர் என தெரியவந்தது. ஒரு நர்த்தகி ஒரு கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு தன்னையும் தன்னைச்சுற்றி இருப்பவர்களை மறந்து அந்த கதாபாத்திரமாகவே மாறி இருந்தால் மட்டுமே நாட்டியத்தின் மூலம் பார்வையாளர்களையும் அப்பாடலின் கருத்தோடு உணர வைக்க முடியும்.

என்னால் உணர வைக்க முடிந்தது. குருவின் முன் அன்று நான் குருதட்சனையாக வைத்த என் வெட்கத்தின் பலனுக்கான அங்கீகாரம் அது என மட்டும் மனம் கூறியது

09 November 2011

அப்சரா

அண்மையில் நான் பயணம் செய்த வரலாறு மற்றும் கலை கலாச்சாரத்திற்கு மிகவும் பிரசித்திப் பெற்ற 'கம்போடியா' நாடு என்னை மிகவும் கவர்ந்தது. என்னுடைய நாட்டிய கலையையும் அப்பயணம் மேம்படுத்தியது எனலாம். பொதுவாகச் சிற்ப கலை, பாரம்பரிய நடனங்கள் மற்றும் கலாச்சார உடைகள் என்னை பெரிதும் கவரும்; அதில் எனக்கு அதிக ஆர்வமும் உண்டு. ஆகவே, நான் எங்குச் சென்றாலும் இதனையொட்டியத் தகவல்களின் மீதுதான் அதிக ஆர்வம் செலுத்துவேன். 'கம்போடியா' பயணமும் அப்படிதான். 'கம்போடியா' வுக்குச் செல்லும் முன்பே ஓரளவு அவ்விடத்தின் வரலாற்று இடங்களையும் கதைகளையும் இணையத்தில் படித்துக் கொண்டேன். விமானத்தில் என் அத்தை மகளுடன் நான் படிதத்தைப் பகிர்ந்து கொண்டேன். என் அத்தை மகள் நிறைய வெளிநாடுகளுக்குப் போன அனுபவம் உள்ளவள். ஆகையால் ஓரளவு 'கம்போடியா' எப்படி இருக்கும் என்பதனை விவரித்தார்.


'கம்போடியா' முற்காலத்தில் கம்பூச்சியா என அறியப்பட்ட ஒரு தென்கிழக்காசிய நாடாகும். இந்நாட்டில் ஏறக்குறைய 14 மில்லியன் மக்கள் வாழ்கின்றன. இந்நாட்டின் தலைநகர் 'புனோம் பென்'. இந்நாட்டுக் குடிமக்களைக் 'கம்போடியர்' மற்றும் 'கிமிர்' எனவும் அழைக்கின்றனர். பெரும்பலான கம்போடியர் தேரவாத பெளத்த சமயத்தைப் பின்பற்றுகின்றனர். 'தேரவாதம்' பெளத்தத்தில் மிகப் பழமையான பிரிவு. இலங்கை மக்களில் 70% இச்சமயத்தைச் சேர்ந்தவர்களாவர். கம்போடியா, தாய்லாந்து, லாவோஸ், மியான்மார் ஆகிய நாடுகளின் மக்களும் பெரும்பான்மையாகத் தேரவாதத்தைப் பின்பற்றுகின்றன.

நிறைய தேடலுடன் அந்நாட்டின் விமானநிலையத்தில் காலை மணி 7.30க்கு அடைந்தேன். விமானநிலையம் அமைதியான சூழ்நிலையில் இருந்தது. 'கம்போடியா' அரசனான ஜெயா வர்மனின் சிலை என்னை வரவேற்றது. மிகவும் கம்பீரமாக வெள்ளை யானை மீது சவாரி செய்யும் ஜெயவர்மனின் சிலை என்னைப் பெரிதும் கவர்ந்தது. மிக அவசரமாக அச்சிலைக்கருகில் படம் பிடித்துக் கொண்டு விமான நிலையத்தை விட்டு வெளியேறினேன்.




இணையத்தில் ஏற்கனவே பதிவு செய்திருந்த தங்கும் விடுதியை நோக்கி என்னுடைய பயணம் ஆரம்பித்தது. நான் எதிர்ப்பார்த்த மாதிரி 'கம்போடியா' இல்லை. எங்கும் அமைதி. மட்சாலையில் பள்ளி மாணவர்கள் காலணி இல்லாமலிருப்பதைப் பார்த்தபோது வறுமையை உணர முடிந்தது. தங்கும் விடுதியில் இருந்த பயண முகவரைச் சந்தித்தேன். அவர் ஒரு கம்போடியர். இவரின் தாய்மொழி கிமிர் . அதுவே இந்நாட்டின் அரசு அலுவல் மொழியாகும். பிரெஞ்சு மொழி இரண்டாவது மொழியாகப் பயன்பாட்டில் உள்ளது. பிரெஞ்சு மொழி சில பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கற்றல் கற்பித்தல் மொழியாகவும் பயன்படுகிறது. தற்போது இளைய தலைமுறையினர், ஆங்கில மொழியினைப் பயில்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். எனவே, அவர் ஓரளவு ஆங்கிலம் பேசினார். அவர் பேச்சில் நிறைய ஆங்கில இலக்கணப்பிழைகள் இருந்தாலும் என்னால் அவரின் மொழியைப் புரிந்துகொள்ள முடிந்தது. அவ்வப்போது என் அத்தை மகளுக்கும் என் தோழிக்கும் அவர் கூறியதில் சிலவற்றை மொழிப்பெயர்ப்புச் செய்துக்கொண்டே என் 'கம்போடியா' பயணத்தைத் தொடர்ந்தேன்.

பயணம் தொடங்கும் முன்பே, என் சுற்றுலாவின் அவசியத்தையும் பற்றி பயண முகவரிடம் சொன்னேன். கம்போடியாவில் உலகில் மிகப் பெரிய இந்து ஆலயமான 'அங்கூர் வாட்டையும்' 1,000 சிவலிங்கங்கள் இருக்கும் நீர்விழுச்சியையும் பார்ப்பதுதான் எனது முதன்மையான நோக்கமாக இருந்தது. 1,000 சிவலிங்கங்கள் இருக்கும் நீர்விழுச்சி சுற்றுலா பட்டியலில் இல்லை என்றும் அந்த நீர்விழுச்சிக்கு அரைநாள் பயணிக்க வேண்டும் என்றார் பயண முகவர். நான் கூறிய இவ்விரு இடங்களும் இந்தியர்கள் வாழ்ந்த தடையங்கள் உள்ள இடங்களாகும். அவர் ஓரளவு என் பயணத்தின் அவசியத்தைப் புரிந்துகொண்டார். பயணமுகவர் என் விருப்பத்திற்கேற்ப சுற்றிக்காட்டினார்.

இந்தியா தஞ்சை பெரிய கோயிலுக்குப் பிறகு என்னைப் பெரிதும் கவர்ந்த இந்து ஆலயம் “அங்கூர் வாட்”. “அங்கூர் வாட்” என்பது, கம்போடியாவில் ஒர் இந்துக் கோயில் தொகுதியாகும். இரண்டாம் சூரியவர்மன்-கம்போடிய மன்னன் (கிபி 1113-1150) என்பவரால் கட்டப்பட்டது. “வாட்” என்பது கிமர் மொழியில் கோயில் என அர்த்தப்படுகிறது.


அங்கூர் வாட்டைச் சுற்றி ஓர் அகழி உள்ளது. அகழி எனப்படுவது கோட்டை முன் சூழப்பட்டுள்ள நீர் அரணாகும். அங்கூர் வாட் மூன்று மண்டபங்களும் ஐந்து கோயில்களையும் சூழப்பட்டுள்ளது. அங்கூர் வாட்டில் சிற்ப கலைகள் மிக அற்புதமாக இருந்தது. முதல் மண்டபம் வெளிப்புறம் சதுரத் தூண்களையும், தாமரைவடிவ அலங்காரங்களைக் கொண்டுள்ளது. சுவர்கள் நடன உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இச்சுவரின் வெளிப்புறம் தூண்களில் நடனப்பெண்கள் விலங்குகளின் மீது அமர்ந்து நடனமாடும் சிற்பங்களும் ஆண் உருவங்கள் முதலியவற்றால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. எல்லா மண்டபச் சுவர்களிலும் நடனமாடும் பெண்களின் உருவங்கள் காணப்படுகின்றன. இரண்டாவது மண்டபத்தின் உட்சுவர்களில் வரிசையாக அமைந்த புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. புடைப்புச் சிற்பம் என்பது பின்னணியில் இருந்து உருவங்கள் புடைத்து இருக்கும்படி அமைக்கப்படும் ஒரு சிற்பவகை ஆகும். இவ்வகை சிற்பங்களைப் பார்ப்பதற்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது ஆதிகால மனிதனின் ஆற்றலை எண்ணி வியந்தேன். இதனைத்தவிர்த்து, பெரும்பலான சுவரில் மகாபாரதக் காப்பியக் காட்சிகள் காணப்படுகின்றன. அகழிக்கு வெளியே அதனைச் சுற்றி புல்வெளி பூங்காக்கள் உள்ளன. கம்போடியாவைக் குறிக்கும் சின்னமாக விளங்கும் இக்கோவிலின் படம் அந்நாட்டின் தேசியக் கொடியிலும் இடம் பெற்றுள்ளது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த “அங்கூர் வாட்”டைக் காலையில் 8 மணிக்குத் தொடங்கி மதியம் வரைக்கும் என்னால் சுற்றிப்பார்த்து தீர்க்க முடியவில்லை. என் பயண முகவர் அங்கூர் வாட்டின் வரலாற்றையும் மிகவும் தெளிவாக விளக்கினார். என்னுடைய அதிகமான கேள்விகளுக்குப் பதில் கூறி களைத்துப் போன பயண முகவர் ஓர் இடத்தில் சற்று நேரம் ஓய்வெடுக்க உட்கார்ந்தார். நான் புகைப்படம் எடுப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தேன். சட்டென்று ஒரு வடிவமான பெண் சிலை என் கண்ணில் பட்டது. என்னையறியாமல் நீண்ட நேரம் அச்சிலையைப் பார்த்தேன். சிறிது நேரத்தில் பயண முகவர் வேறொரு இடத்திற்கு அழைத்துச் சென்றார். அவருடன் நடந்து செல்லும் போதும் அச்சிலையின் ஞாபகம் வந்துக் கொண்டே இருந்தது. வேறு எங்காவது அச்சிலையை மீண்டும் காண முடியுமா என தேடிக்கொண்டே போனேன். மதிய உணவுக்குப் பிறகு வேறொரு இந்து ஆலயத்திற்குச் செல்வதாகத் திட்டம். சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு பயணம் தொடர்ந்தது.



 'அங்கூர் தோம்' எனும் மற்றொரு இந்து ஆலயத்திற்குச் சென்றோம். அங்கூர் தோம் ஐந்தாவது ஜெயவர்மன் சாம்ராஜ்யத்தின் பொது கட்டப்பட்டது. இந்தக் கோவிலின் கோபுரம் பிரம்மாவின் முகம் போல மூன்று பக்கமும் முகங்களால் சுழப்பட்டிருந்தது. பார்ப்பதற்கு மிகவும் அற்புதமாக இருந்தது. அவ்வற்புதத்தை ரசித்துக்கொண்டிருக்கையில் மீண்டும் அச்சிலை என் கண்ணில் தேன்பட்டது. 'அங்கூர் வாட்'டில் பார்த்த அதே சிலை. அந்தச் சிலையின் வடிவம், ஒரு நாட்டிய பெண் போல் இருந்தது. உடனே, என் புகைப்படக்கருவியில் படம் எடுத்துக்கொண்டேன். என் பயண முகவரை என்னுடன் அழைத்து, இச்சிலையைப் பற்றி கூறுமாரு கேட்டேன். அவர் 'அப்சரா' என்றார். “What its Apsara?” என்று அதிர்ச்சியுடன் கேட்டேன். கம்போடியாவின் கலாச்சாரத்திற்கேற்ப அப்சராவின் உடையும் ஆபரணமும் மாறியிருந்தது. எனவே, என்னால் அஃது அப்சரா என்பதனைக் கண்டுப்பிடிக்க முடியவில்லை. என்னை அந்தச் சிலை ஏன் ஈர்த்தது என்று அப்பொழுதுதான் புரிந்தது.



நாட்டியம் பயில்வர்களுக்கு அப்சராக்களைப் பற்றி தெரியாமல் இருக்க முடியாது. அடுத்த நொடியே, அவர் ரம்பை, மேனகா, ஊர்வசி என்றும் கூறினார். என்னுடைய இதயம் படபடவென்று துடிக்க ஆரம்பித்தது. என் உடலில் எல்லா உருப்புகளும் வேகமாக செயல்படுவதை உணர்ந்தேன். தொடர்ந்து, அவர் அப்சராக்களைப்பற்றிப் பேசத் தொடங்கினார். அப்சராக்களைப் பற்றிய எனது புரிதலை அவர் கூறும் போது சரி செய்துக் கொண்டேன். அப்சராக்களைப் பற்றி எனக்குத் தெரிந்த சிலவற்றையும் பரதநாட்டியத்தில் அப்சராக்களின் பங்கையும் அவரிடம் பகிர்ந்து கொண்டேன்.

அப்சராக்கள் எனப்படுபவர்கள் இந்து மற்றும் பெளத்தப் பழங்கதைகளில் வரும் பெண்கள். இவர்கள் அழகாகவும் தெய்வீக ஆற்றல் பெற்றவர்களாகவும் இருப்பர். ரிக் வேதத்தில், இவர்கள் காந்தர்வர்களின் மனைவியர்கள். சிறப்பாக நடனமாட வல்லவர்களான இவர்கள் கடவுளரின் சபையில் தம் கணவர்களின் இசைக்கேற்ப நடனமாடுவர்கள். ஊர்வசி, ரம்பை, மேனகை, திலோத்தமை ஆகியோர் நன்கு அறியப்பட்ட அப்சரசுகள். அப்சராகள் லவுகீக (பொருளுலக), மற்றும் தெய்வீக (கடவுள் தன்மையுடைய) அப்சரா என இருவகையாகக் குறிக்கப்படுகின்றனர். மகாபரத்தில் மற்றும் இராமயணத்தில் அப்சராக்களின் பங்கு அளப்பெரியது.

நான் ஒரு நர்த்தகி என்பதை அறிந்து பலமுறை மகிழ்ச்சி பட்டுக் கொண்டார் என் பயணமுகவர். என்னைத் தொடர்ந்து நாட்டியம் பயிலும் படியும், ஒருநாள் 'கம்போடியா கல்சரல் ஷோ' (Cambodian cultural show)” வில் நாட்டியம் ஆடும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாகக் கூறினார். கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. அதற்கு முன், நான் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் கூறியவர் என்னுடன் அதிக பேசத் தொடங்கினார். அவர் பேச்சில் நிறைய மரியாதையும் பணிவும் சேர்ந்திருப்பதை உணர்ந்தேன். எனது பெயரையே நான் ஒரு நர்த்தகி எனத் தெரிந்த பிறகுதான் கேட்டார். அவர் பேச்சில் மரியாதை சேர்ந்திருந்தது. அந்த மரியாதை உனக்கல்ல உன்னுள் இருக்கும் நாட்டியத்திற்கு என என் மனம் கூறிக்கொண்டே இருந்தது. அந்த வேளையில் என் நாட்டிய குருவையும் என் தாயாரையும் மனதில் வணங்கியப்படி எனதறைக்குத் திரும்பினேன். மனதில் ஒருவகையான சந்தோஷத்துடன் எனதறைக்குப் பக்கத்தில் இருந்த நீச்சல் குளத்தில் குளிக்கத்திட்டமிட்டேன்.

திடீரென்று, வரவேற்பறையிலிருந்து எனக்கு அழைப்பு வந்துள்ளதாக கம்போடிய பையன் எனதறைக் கதவைத் தட்டினான். யார் கம்போடியாவில் என்னை அழைப்பது என நிறைய கேள்விகளுடன் தொலைப்பேசியில் “Hello” என்றேன். தொலைபேசியில் என் பயணமுகவர் பேசினார். அவர் பேச்சில் விறுவிறுப்பு இருந்தது. இருமுறை பொருமையாகக் கேட்டபிறகு, அவர் கூற வந்த தகவல் எனக்குப் புரிந்தது. இன்றிரவு ஓர் உணவகத்தில் கம்போடியாவின் பாரம்பரிய நடனம் நடைப்பெறுவதாகவும், எனக்கு விருப்பம் இருந்தால் போகலாம் என்றும் கூறினார். கிடைக்கும் வாய்ப்பை நழுவ விடாமல் என் அத்தை மகள் மற்றும் என் தோழியுடன் உடனே கிளம்பினேன்.

அந்த உணவகம் பார்ப்பதற்கு மிகவும் ஆடம்பரமாக இருந்தது. பல்லின நாட்டு மக்கள் அந்த நிகழ்ச்சியைக் காண வந்திருந்தனர். பெரும்பான்மையோர் ஆங்கிலேயர்களாக இருந்தனர். அங்கு வந்திருந்த எல்லோரும் நாட்டியத்துறையில் சம்பந்தப்பட்டவர்களைப் போல் இருந்தார்கள். பலவகையான உணவுகள் இருந்தும் என்னால் அதை ருசிக்கமுடியவில்லை. என்னுடைய முழு கவனமும் நாட்டிய நிகழ்ச்சியின் மேல் இருந்தது. நிகழ்ச்சி தொடங்கும் முன் கம்போடியன் மொழியில் நடனத்தையொட்டி விளக்கம் கொடுத்தனர். என் பயணமுகவர் அதனை மொழி பெயர்த்து என்னிடம் கூறினார். முதல் நடனம், இராமயணத்தையொட்டி இருந்தது. இராவணன் சீதையை இலங்கைக்குத் தூக்கிச் செல்லும் காட்சி அது. மிகவும் அற்புதமான இருந்தது. நான் பார்த்த அப்சரசு சிலையைப் போலவே. நாட்டிய நுணுக்கங்களைப் பற்றி தெரிந்திருந்ததால் அந்நடனம் மிக எளிதாகப் புரிந்தது.


கம்போடியன் நடனம் அரசவையிலிருந்து தோற்றுவிக்கப்பட்டது. இந்நடனம் மிகவும் தொன்மைவாய்ந்தது. கம்போடியன் நடனத்தின் உடை மற்றும் பாடல் இந்நாட்டியத்திற்கு மேலும் சிறப்பூட்டியது. இருபதாம் நூற்றாண்டில் இந்நடனம் பொது மக்களிடையே பரவியது. இந்நடனத்தை விடுமுறையின் பொது, பொது இடங்களில், சுற்றுப்பயணிகளின் முன் ஆடப்படுகின்றன. கம்போடியாவின் பரம்பரிய நடனங்கள் இருவகைப்படும். அவை 'Wishing Dance' (Robam Chun Por) and 'Apsara Dance' (Robam Tep Apsara) ஆகும். “Robam Tep Apsara” எனப்படும் நடனம் தெய்வாம்சங்கள் நிரம்பிய நடனமாகக் கருதப்படுகிறது. கம்போடியன் மக்கள் இந்நடனத்தை மிகவும் உயர்வான நடனமாகக் கருதுகின்றனர். இந்த வகை நடனம் கம்போடியா இராணியால் அரசவையில் ஆடப்பட்டது என்று பழங்காலத்து கம்போடிய இதிகாசங்கள் கூறுகின்றன. இவ்வகை நடனத்தை ஆடும் நடனமணிகளின் உடையும் அவர்கள் உடலும் மிகவும் வசீகரமாக உள்ளது. பெரும்பாலான நடனங்கள் இராமயணத்தையொட்டி இருக்கின்றன.



கம்போடியன் நடனத்திற்கும் இசைக்கும் நம் பாரம்பரிய நடனமான பரதநாட்டியத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் இருந்தன. கம்போடியன் நடனங்கள் இதிகாசக் கதைகளையொட்டி அமைந்திருக்கின்றன முக்கியமாக இராமயணம். நம் பரதமும் பழங்காலத்து இதிகாசக்கதைகளையொட்டிதான் பல்லாயிர நடனப்பாடல்களும் கீர்த்தனைகளும் பிறந்தன. கர்நாடக சங்கீதத்திலுள்ள பாடல்களும் இதனையொட்டிதான் இருக்கின்றன. இராமயணம் மற்றும் மகாபாரதம் பரதநாட்டியத்திலும் கர்நாடக சங்கீதத்திலும் மிக முக்கியமான காவியமாகும். இவ்விரு காவியத்தைப் போற்றிப் பாடாத நாட்டிய மற்றும் சங்கீத நிகழ்ச்சிகளே இல்லை. கம்போடிய நடனத்திற்கும் பரதத்திற்கும் மொழிகள் வெவ்வேறாக இருந்தாலும் நாட்டியத்தின் கரு என்னவோ ஒன்றுதான். கம்போடியர்களும் நாட்டியத்தின் வழி தன்னுடைய கடவுகளைப் போற்றி ஆடுகின்றனர். ஆகையால்தான் கம்போடியர்கள் கடவுளுக்கு அடுத்ததாக நடனமாடுபவர்களை உயர்வாகக் கருதுகின்றனர். நம் இந்தியர்களிடையும் இந்த உணர்வை அதிகமாகப் பார்க்கிறேன். சட்டென்று, என் நடன குரு இரா. சந்திரமோகன் நாட்டிய வகுப்பின் போது சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது. ஒரு சிற்பி தன் கைகளை கடவுளின் சிலைகளை வடிப்பதன் மூலம் இறைவனுக்கு அற்பணிக்கின்றான். ஒரு புரோகிதர் தன்னுடைய குரலை இறைவனின் பாடல்களையும் மந்திரங்களையும் பராயணம் செய்து இறைவனுக்கு அற்பணிக்கின்றான். ஆனால் ஒரு நடனமணி தன்னுடைய முழு உடலையும் சிந்தனையையும் உள்பட இறைவனுக்காக நாட்டியத்தின் மூலம் அற்பணிக்கின்றாள். ஆகவேதான், நாடனமாடுபவர்களை நம் சமுதாயம் உயர்வான பார்க்கிறது. இறைவனிடன் சரணடைய நிறைய வழிகள் உள்ளன. சிலர் சேவை மற்றும் தர்மம் செய்து இறையருள் பெருவர், சிலர் பூஜை புனஸ்காரங்களை செய்வர், சிலர் தியானத்தின் மூலம் இறையருள் பெறுவர். இந்த வரிசையில், ஆடல் பாடல் மூலம் இறைவனைச் சரணடைவது ஒருவகையாகும். இந்தக் கருத்தைக் கம்போடிய மக்களிடமும் கண்டேன்.

நிகழ்ச்சி முடிந்து, என் பயணமுகவர் என்னை நடனமணிகளிடன் அழைத்துச் சென்று அறிமுகம் படுத்தினார். கம்போடிய நடனமணிகளிடம் பேசுகையில் நாட்டியத்தின் மூலம் தங்களை இறைவனுக்குத் சமர்ப்பிப்பதாகச் சொன்னார்கள். பெரும்பாலான நடனமணிகள் திருமணம் செய்யாமல் முழுமையாகத் தங்களை நடனத்துறையில் ஈடுபடுத்திக் கொண்டிருப்பதாகவும் சொன்னார்கள். என் வாழ்க்கையில் நான் பார்த்த அதிகமான நடனமணிகளிடன் லவுகீகத்தில் (பொருளுலகத்தில்) பற்றற்றவர்களாக உள்ளவர்கள். நடனமணிகள் பற்றற்ற தன்மையுடன் இருப்பதைக் கம்போடியாவிலும் கண்டேன். கம்போடியாவின் நடனமணிகளிடம் பேசும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தேன். அவர்கள் நம் பரதத்தை இணையத்தில் பார்த்ததுண்டு என்றார்கள். பணப்பையில் இருந்த எனது நாட்டிய புகைப்படத்தைக் காட்டி, அவர்களிடம் பரத்தைப் பற்றி சிறிது நேரம் உரையாடினேன். நிறைய கேள்விகள் கேட்டார்கள். அவர்களுக்குப் பதில் அளித்தேன் என நினைகிறேன்.

உலகத்தில் ஒவ்வொரு இந்து ஆலயமும் நாட்டிய சாஸ்திரத்திலுள்ள கர்ணங்களைதான் (நடன அசைவுகள்) அடிப்படையாகக் கொண்டுள்ளன. கம்போடியவிலுள்ள இந்து ஆலயங்களிலும் இதனைதான் அதிகம் கண்டேன். இதிகாசக்கதைகளில் வரும் முதன்மையாக கதாபாத்திரங்களின் சிலைகள், அப்சராக்கள், மிருகங்கள், சில முக்கிய சம்பவங்களின் காட்சிகள் போன்ற கம்போடிய ஆலயத்திலுள்ள சிற்பக் கலைகளில் காண முடிகிறது. இத்தகைய ஒற்றுமைகள் இந்து மதத்தையும் ஒரே கரு/ கருத்துடைய இதிகாசக்கதைகளையும் அடிப்படையாகக் கொண்டிருப்பதால் நிகழ்ந்திருக்கும் என நினைக்கிறேன்.

அன்றிரவு முழுவதும் என் சிந்தனை கம்போடியன் நடனத்தையொட்டியே இருந்தது. மறுநாள், என் பயணமுகவர் எனக்கு ஓர் அப்சரா சிலையையும் வரைப்படம் ஒன்றினையும் பரிசளித்தார். அவரிடமிருந்து நான் அப்பரிசை எதிர்ப்பார்க்கவில்லை. எனக்கு யாராவது பரிசளித்தால் உடனே என் பங்குக்கு ஏதேனும் வாங்கிக்கொடுத்து கடனைத் தீர்த்துக்கொள்வேன். அவருக்கு என்ன வேண்டும் எனக் கேட்ட பொது, என் நாட்டிய புகைப்படத்தைக் கேட்டார். என் முகநூலிலிருந்து என் படத்தை “save” செய்துக்கொள்ள அனுமதி கேட்டார். சற்றும் யோசிக்காமல் “okay, sure” என்றேன். நான் எங்குச் சென்றாலும் அந்த இடத்தின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் பொம்மை அல்லது சிலைகளை வாங்குவது வழக்கம். என்னுடைய சேமிப்பில் நாட்டிய சம்பந்தப்பட்ட அப்சராக்களின் சிலை சேர்ந்திருப்பது என் மனதை நெகிழ வைத்தது.

உலகெங்கும் நாட்டியம் பலவகையாகப் பரவியிருப்பதை அனைவரும் அறிந்த ஒன்றாகும். இது ஒவ்வொரு நாட்டின் மொழி, இறை நம்பிக்கை, கலாச்சாரம், அரசமைப்பு மற்றும் சூழலுக்கேற்ப மாறுப்பட்டிருக்கிறது. ஆனால், அவையனைத்தும் பரத சஸ்திரத்தையொட்டி இருக்கின்றன என்று கூற பெருமைப்படுகிறேன். என்னுடைய கம்போடிய பயணம் என் நாட்டியத்துறையின் மீதான ஆர்வத்தை வளர்த்தோடு இல்லாமல் என் சமய உணர்வையும் வலுப்படுத்தியது. பரதத்திற்கும் கம்போடியன் நடனத்திற்கும் இருக்கும் ஒற்றுமையை நினைத்து ஆச்சரியப்படுகிறேன்.

http://www.vallinam.com.my/issue35/essay1.html

20 July 2011

NATYARANGAM

The parents & Students of Sri Nandhigeswarar Dance Academy &
"Bharatha Kalasihamani", "Aadal Arasu"
Guru Sri R.Chandramohan
Cordially Invites
YOU
to an evening of
Bharathanatyam & Kuchipudi Dance Recital
Date : 10-09-2011 (Saturday)
Time : 8.01pm
Venue : Dewan Merdeka, Tapah. Perak. Malaysia

for more information plss contact
010-3974 100
016 6091 244
013 4815 331

07 June 2011

My Performance At TFA, Penang.

Saturday, October 13, 2007

We were also honoured to have 3 students of the Nandikeshwara Dance Academy, under the tutelage of Guru Shri Chandramohan who is a disciple of Padmashri Adyar Lakshman, perform a bharatanatyam repertoire for us. They were Kogilavani Krishnamoorthy, Anthiri Ramachandran and Loshini Vijayakumar. These three talented artistes performed 7 pieces for us.

Kogilavani Krishnamorty

Anthiri Ramachandran

Loshini Vijayakumar
The repertoire began with a Mallari by Loshini Vijayakumar followed by the famous Shri Chakra Raja by Kogilavani Krishnamoorthy. Next was Shivagama Sundari by Loshini and Anthiri. Then came Valli Kanavan which was a traditional piece performed by Kogilavani Krishnamoorthy. This was followed Nandhi Chol by the whole group and Kuyile by Loshini and last but not least Govinthan Kuzhalosai by the whole group again. The dancers entertained all of us with their graceful, and upbeat steps. We hope they enjoyed performing for us as much as we enjoyed watching them. We would like to take this opportunity to extend our gratitude to the dancers of Nandikeshwara Dance Academy for their beautiful love offering.

http://navarathri2007tfapenang.blogspot.com/2007/10/day-2-durga.html

29 April 2011

Three-hour classical Indian dance performance enthralled audience

Tuesday December 7, 2010


Three-hour classical Indian dance performance enthralled audience

MALACCA: It was an enchanting night dedicated to the appreciation of classical Indian cultural dance through the graceful and intricate performance of R. Chandramohan and his disciples in Malacca recently.

For the first time, the renowned Indian dance guru from Kuantan, Pahang staged a three-hour show with his 38 disciples before a 500-strong audience at the Malacca International Trade Centre (MITC) convention hall.


Keeping the art alive: It was an enchanting night watching live performance of classical Indian dance by R. Chandramohan and his disciples.



Featuring intricate footwork and elaborate hand gestures, a line-up of 20 baratha natyam and kuchipudi captivated the crowd with their moves which were accompanied by traditional Telugu songs, mainly singing praise to the Hindu goddesses.

The graceful dance movements coupled with the dancers’ expressive eyes and facial expressions mesmerised the audience throughout the night.
A member of the organising committee K. Arendevi said the show was put up by the Warisan Seni and Kebudayaan Sri Nandhigeswarar to raise fund for its new academy building in Kuala Selangor.

The academy, founded by Chandramohan in March 2006, aimed at raising awareness, interest, understanding and appreciation for Indian dance and culture.


Expresive: A female dancer showing some of the elaborate hand gestures


“It started as a cultural academy for the preservation of tradition Indian art, especially in the field of dance and music. “Courses on traditional baratha natyam and kuchipudi dance, sangeetham or vocals, traditional music instruments, thevaram recital and yoga including nattuvangam (dance recital) are also offered in the academy,” she said.With 24 years of experience in the art of Indian classic dance, Chandramohan said he believed Indian dance forms should be firmly entrenched in the evolving Indian culture in Malaysia.“I wish to see more young people participating and committing themselves to perfecting and keeping the art of classical Indian dance alive,” he said.Throughout the years, his dance academy has expanded and he conducts dance classes daily in Rawang, Shah Alam and Cameron Highlands with his daily routine starting as early as 5am.
Start young: Two young female dancers clad in colourful costume dancing for the audience.



His students range from the youngest at four years old until “as long as you can dance”.
“I hope the direction I take would see the ancient Indian dance forms flourish in Malaysia,” he added.
Meanwhile, Deputy Minister in the Prime Minister’s Department Senator Datuk T.Murugiah who was also present to watch the performance said he was entertained by Chandramohan’s captivating performance.
“The younger Indian generation should learn to understand and appreciate their origins and roots before they are forgotten.“Culture is what makes a community unique and the values must be inherited,” he added.


http://thestar.com.my/metro/story.asp?sec=southneast&file=%2F2010%2F12%2F7%2Fsouthneast%2F7512318